அரசியல்

தமிழக பட்ஜெட்டின் முக்கிய சில அம்சங்கள்!

Published

on

வறுமையை ஒழிக்கும் தாயுமானவர் திட்டம்! தமிழ்நாட்டில் பன்முக வறுமை குறியீட்டின் கீழ் உள்ள 2.2% ஏழை மக்களுக்கு அரசின் உதவிகளை ஒருங்கிணைத்து வழங்கி அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்கப்படும்.

மூன்றாம் பாலினத்தவர்களின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்! அரசு கூர்நோக்கு இல்லங்கள் இனி ‘குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை’ என்று பெயர் மாற்றப்பட்டு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

கொற்கை மற்றும் சங்ககாலப் பாண்டியரின் துறைமுகமான அழகன்குளம் பகுதிகளின் கடலோரங்களில் 65 இலட்சம் ரூபாய் செலவில் முன்கள ஆய்வும், ஆழ்கடல் ஆய்வும் மேற்கொள்ளப்படும்.

பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் காலச் சுவடுகளைத் தேடி கேராளவில் உள்ள முசிறி, ஒடிசாவில் உள்ள பாலூர், ஆந்திராவில் உள்ள வெங்கி, கர்நாடகத்திலுள்ள மஸ்கி ஆகிய தொல்லியல் சிறப்புமிக்க இடங்களிலும் இந்த ஆண்டு அகழாய்வு மேற்கொள்ளப்படும்.

தமிழ்ப் புதல்வன் திட்டம்! அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கும் ரூ 1000! 2024 – 2025 நிதியாண்டிற்கு ரூ 360 கோடி ஒதுக்கீடு!

கலைஞரின் கனவு இல்லம்! 2024 – 2025 ஆம் ஆண்டு ஒரு இலட்சம் புதிய வீடுகள்! ரூ 3,500 கோடி நிதி ஒதுக்கீடு!

கல்வி பெற்ற சமூகம் புதிய சிந்தனைகளையும், சமூகநீதி உலகையும் உருவாக்கும் சமூகமாக திகழும். தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ 44,042 கோடி நிதி ஒதுக்கீடு!

மேலும் 10,000 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கம்!

சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களில் மேலும் 3 புதிய தோழி விடுதிகள்!

கோயம்புத்தூரில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா! தூத்துக்குடியில் புதிய விண்வெளி தொழில் & உந்துசக்தி பூங்கா!

வடசென்னை வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ 1,000 கோடி ஒதுக்கீடு!

சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் மாதம் ரூ 1000 புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம்!

500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5,000 ஏரிகள், குளங்கள் புனரமைப்பு!

 

 

Click to comment

Trending

Exit mobile version