ராயல் கேர் செவிலியர் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களின் விளக்கேற்றும் விழா கடந்த 17ஆம் தேதி சனிக்கிழமை காலை பத்து மணியளவில் கோவை ராமலக்ஷ்மி அரங்கில் நடைபெற்றது. ராயல் கேர் மருத்துவமனை மற்றும் நர்சிங் கல்லூரியின் தலைவர், இயக்குனர் டாக்டர் K மாதேஸ்வரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்புவிருந்தினராக கோவை மாவட்ட ஆட்சியர் திரு கிராந்திக்குமார் அவர்கள் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் திருச்சூர் ஜூப்ளி மிஷன் செவிலியர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஏஞ்செலா ஞானதுரை அவர்கள் கௌரவ விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு செவிலியர் பணியை பற்றியும் அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார் . மேலும், ராயல் கேர் செவிலியர் கல்லூரியின் முதல்வர் திருமதி டாக்டர் திலகவதி ராய் அவர்கள் செவிலியர் உறுதிமொழியை முன்மொழிய, மாணவ மாணவியர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிறைவாக ராயல் கேர் செவிலியர் கல்லூரியின் துணை முதல்வர் பேராசிரியர் திருமதி சுமிதா நன்றியுரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டு இந்த விழாவினை சிறப்பித்தனர்.