மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, போயஸ் கார்டனில் வேதா இல்லம் எதிரில் புதிதாக கட்டியுள்ள தனது வீட்டிற்கு ஜெயலலிதா இல்லம் என பெயர் சூட்டியுள்ள திருமதி. வி.கே சசிகலா, அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். சுமார் 7 ஆண்டுகள் கழித்து மீண்டும் போயஸ் கார்டனுக்குள் நுழைந்துள்ளார் சசிகலா.
மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதா உயிருடன் இருந்தவரையும், சிறைக்கு செல்லும் வரையிலும் போயஸ் தோட்ட இல்லத்திலேயே ஜெயலலிதாவுடன் தங்கியிருந்த சசிகலா, சிறையிலிருந்து வெளியே வந்ததும் சென்னை திநகரில் உள்ள இளவரசி மகள் கிருஷ்ணபிரியா வீட்டில் தங்கியிருந்தார். சமீபத்தில் கட்டி முடிந்த போயஸ் தோட்டத்தில் இல்லத்திற்கு கடந்த மாதம் கிரகபிரவேசம் நடந்தது முடிந்தது. இன்று முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் பிறந்த நாளை முனீட்டு தனது புதிய வீட்டில் குடியேறியுள்ளார் சசிகலா .
மீண்டும் போயஸ் கார்டனில் பரபரப்பு அரசியல் நடக்குமா என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது.