UPDATED @ 11:45AM | 19 மே 2024
முக்கிய செய்திகள்
- 5ம் கட்ட தேர்தல் – நாளை வாக்குப்பதிவு உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
பிரசாரம் ஓய்ந்த நிலையில், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரம்..
- கேரளாவில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவரும் நிலையில், கடந்த 4 மாதங்களில் 43 பேர் பலி
கேரளாவில் டெங்கு, மலேரியா மற்றும் மஞ்சள் காமாலை உள்பட நோய்கள் வேகமாக பரவி வருகின்றன. இந்த நோயைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டார்.
- கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் எச்சரிக்கை
கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய கூடும். பத்தனம்திட்டா, கோட்டயம் மற்றும் இடுக்கி ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் எச்சரிக்கை.
- பொள்ளாச்சி அடுத்த அட்டகட்டியில், 16வது கொண்டை ஊசி வளைவில், பாறை விழுந்துள்ளதால் தற்போது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சாலையை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
- சமையல் எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடாக்கி பயன்படுத்தினால் புற்றுநோய் உண்டாகும்! ICMR எச்சரிக்கை!