விளையாட்டு

பெங்களூரு 27 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது!

Published

on

நேற்று எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த டூ-ஆர்-டை ஐபிஎல் 2024 ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சென்னை சூப்பர் கிங்ஸை தோற்கடித்து பிலே ஆப் சுற்றுக்கு தகுதிப் பெற்றது. டாஸ் வென்ற சிஎஸ்கே பௌலிங்க தேர்வு செய்தது. முதலில் ஆடிய ஆர்சிபி 5 விக்கெட்டுக்கு 218 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய சிஎஸ்கே 20 ஓவர்களில் 191 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவிய பிலே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் பிளேஆஃப்களுக்குள் நுழைய. டு பிளெசிஸ் தலைமையிலானராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பல விஷயங்களைச் செய்யது வெற்றிக்கு கடுமையாகப் போராடியது. ரன்கள் குவிப்பது, அக்ரோசமாக பீல்டிங் செய்வது, முக்கிய தருணங்களில் சிறப்பாக பந்து வீசுவது என பல போராட்டங்களை நடந்தி வெற்றிகொண்டது. குறிப்பாக கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுத்தால் சிஸ்கே பிலே ஆப் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில் சிறப்பாக பந்துவீசிய தயாள் வெற்றியைத் தேடித்தந்தார்.

நம்பமுடியாத ஒரு இரவு :

நம்பமுடியாத ஒரு இரவு! மற்றும் ஒரு சிறந்த வெற்றியுடன் பெங்களூரில் முடித்து மகிழ்ச்சி அளிக்கிறது மழை இடைவேளை முடிந்து திரும்பி வந்த பிறகு நானும் விராட்டும் 140-150 நல்ல ஸ்கோர் என என்று பேசிக் கொண்டிருந்தோம். 200 ரன்களை எடுத்தது நம்பமுடியாததாக இருந்தது. கடந்த 6 ஆட்டங்களில் பேட்டர்கள் நல்ல நோக்கத்துடனும் நல்ல ஸ்ட்ரைக் ரேட்டுடனும் பேட்டிங் செய்தனர்.ஈரமான பந்தில் நாங்கள் பந்துவீசிய விதம் நம்பமுடியாததாக இருந்தது, இந்த ஆட்ட நாயகன் விருதை யாஷ் தயாளுக்கு அர்ப்பணிக்கிறேன். அவர் பந்துவீசிய விதம் சிறப்பாக இருந்தது. இதற்கு அவர் தகுதியானவர். முதல் பந்தில் யார்க்கர் வேலை செய்யவில்லை, பின்னர் நடந்தது சிறப்பானதாக அமைந்தது தொடர்ச்சியாக 6 ஆட்டங்களை வெற்றியை சிறப்பானது. எங்களின் முதல் இலக்கு நாக் அவுட்களுக்குள் நுழைவதுதான், அதைச் செய்துள்ளோம்.

 

 

Click to comment

Trending

Exit mobile version