திங்கட்கிழமை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 வருட தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது. பரபரப்பான போட்டியில் பல திருப்பங்களுக்குப் பின் ஆர்சிபி அணி இறுதி ஓவர்ரில் சிறப்பாக செயல்பட்டடு வெற்றிப் பெற்றது .
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது முதலி ஆடிய ஆர்சிபி அணி அதிரடியாக விளையாடிய 225 ரன்கள் குவித்தது சிறப்பாக விளையாடிய விராட் க்ஹோலி 67 ரன்களை, கேப்டன் படிதர் 64ரன்களை எடுத்து இந்த இமாலய ஸ்கோர் குவிக்க உதவினார்.
அதிரடியாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் துவக்க வீரரும் இந்திய அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மா இரண்டு பௌண்டரி ஒரு சிக்ஸர் என சின்ன வெடியுடன் வெளியேறினார். பின்னர் ஆடிய வீரர்கள் சரியாக விளையாடத்தால் தடுமாறிய மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பாதைக்கு அருகில் கொண்டு சென்றனர் அணியின் கேப்டன் ஹர்டிக் பாண்டியவும், திலக் வருமாவும் , கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவை பட்ட நிலையில் விக்கட்டுகளை இழந்து தோல்வியை தழுவியது மும்பை இந்தியன்ஸ் அணி.
விராட் க்ஹோலி செயல் !
இந்த பெரிய வெற்றிக்குப் பிறகு பெங்களூரு அணி உற்சாகமடைந்தது. கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் நமன் திர் விக்கெட்டை இழந்த பிறகு, விராட் கோலி மைதானத்தின் நடுவில் அகோரக்ஷமாக கர்ஜித்தார்.இந்த தோல்வி மற்றும் விராட் கோலி செயல் ஹார்டிக் பாண்ட்யா மற்றும் ரோஹித் சர்மாவை வேதனையில் ஆழ்த்தியது,
ரஜத் படிதர் கூட்டணி மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளனர். தற்போது நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளனர். ஐந்து போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்று எட்டாவது இடத்தில் உள்ளது மும்பை அணி.