Sports

லக்னோ த்ரில் வெற்றி! 40 ஓவர்களில் 472!

Published

on

ஐபிஎல் 18ஆவது சீசன் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில், டாஸ் வென்ற கேகேஆர் அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

லக்னோ இன்னிங்ஸ்:
முதலில் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி அதிரடியாக விளையாடினார்கள். குறிப்பாக, ஓபனர்கள் எய்டன் மார்க்கரம் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் அதிரடி காட்டினார்கள். மார்க்கரம் 28 பந்துகளில் 47 ரன்களை குவித்தார். மிட்செல் மார்ஷ் 48 பந்துகளில் 6 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உட்பட 81 ரன்களை குவித்தார் .

பின்னர் களமிறங்கிய மேற்இந்திய தீவு அணியின் வீரர் நிகோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 7 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் உட்பட 87 ரன்களை குவித்து லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி ஸ்கோர்ரை உயர்த்தி கொடுத்தார் , இதனால் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி 238/3 ரன்களை குவித்தது.

இமாலய இலக்கை நோக்கி கேகேஆர் அணி

இலக்கை எட்டிப்பிடிக்க களமிறங்கிய கேகேஆர் அணி, ஓபனர் டி காக் 15 ரன்களுக்கும் சுனில் நரைன்ட 30 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர்.

இதனைத் தொடர்ந்து, கேப்டன் அஜிங்கிய ரஹானே மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் அதிரடி காட்டினார் , ரஹானே 35 பந்துகளில் 61 ரன்களையும், வெங்கடேஷ் ஐயர் 29 பந்துகளில் 45 ரன்களையும் அடித்து ஸ்கோரை உயர்த்தியதால், வெற்றி வாய்ப்பை நெருங்கியது கேகேஆர் அணி

அதிரடி கம்பேக்:
ஆனால், அதன்பிறகு, களம்இறங்கிய வீரர்கள் சரிவர அடாததால் 20 ஓவர்கள் முடிவில் 234/7 ரன்களை மட்டும் எடுத்து, 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

Click to comment

Trending

Exit mobile version