சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் கேப்டனாக எம்.எஸ். தோனி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே வழிநடத்தி கொண்டிருந்த ருதுராஜ் கெய்க்வாட் முழங்கை எலும்பு முறிவு காரணமாக ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ளதால் , இந்த முடிவு எடுக்கப்பட்டுள்க்கதாக சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்தார்.
ஜோஃப்ரா ஆர்ச்சரின் ஷார்ட் பால் பந்து தாக்கியதால் கெய்க்வாட்டுக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவித்தார் ..
வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் தலைமைப் பொறுப்பில் டோனி செயல்படுவார் .. என்று சிஎஸ்கே அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே தொடர் தோல்விகளை சந்தித்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ருத்திராஜ் விலகளால் பெரும் பாதிப்பு அடையும் என சரிகர்கள் கூறுகின்றனர். இருப்பினும் மீண்டும் டோனி கேப்டன் பதவி ஏற்றுள்ளதால் வெற்றிக்கு திரும்பும் என காத்துக் கிடக்கின்றன சென்னை ரசிகர்கள்.